கடைசிவரை அம்மாவை பார்க்காதது நினைத்து கண்ணன் சுடுகாட்டில் கதறி அழுகிறார்.

Pandian Stores Episode Update 21.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். லட்சுமி அம்மா மரணமடைந்ததை தொடர்ந்து கண்ணனுக்கு தகவல் தெரிவிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவருக்கு தகவல் கொடுக்க முடியவில்லை.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

அம்மாவின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்றும் கொல்லி வைக்காமல் கண்ணன் வந்து விடட்டும் என அவரது அண்ணன்கள் காத்திருந்தனர். நான் கண்ணன் வர தாமதமானதால் வேறுவழியில்லாமல் கொல்ல வைக்க வேண்டியதாயிற்று.

அம்மா இறந்து விட்டதாக ஐஸ்வர்யா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் அழுதுகொண்டே சுடுகாடு வரை ஓடி வந்தான். அவன் வருவதற்குள் கொள்ளி வைத்து விட்டனர். இதனால் கண்ணன் கதறி அழுது அம்மாவை இனி எங்க போய் பார்ப்பேன். ஹாஸ்பிடல் இன் பார்க்கல வீட்டிலேயும் பார்க்கல.. இப்படி கடைசி வரைக்கும் என்ன எங்க அம்மாவை பார்க்காமலேயே பண்ணிட்டீங்களே என அழுகிறார்.

கண்ணனுக்கு ஆறுதல் சொல்ல போன மூர்த்தியையும் ஜனார்த்தனன் தடுத்து கொள்ளி வைத்த பிறகு திருமணம் ஆக போகக் கூடாது என வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார். வீட்டுக்கு வந்த மூர்த்தி கயலை தூக்கி இனி நீ தான் எங்க அம்மா என கூறுகிறார்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

கோவில் அருகே ஐஸ்வர்யா அமர்ந்து அழுது கொண்டிருக்க கண்ணன் வருகிறான். எப்போது ஐஸ்வர்யா நீ உங்க அம்மாவோட முகத்தை பார்க்கவே கூடாது என்று முடிவு பண்ணிட்டாங்க. என்ன கூட பக்கத்துல சேர்க்கல‌.. எனக்காக கொஞ்ச நேரம் காத்து கொண்டு இருக்கலாம் ஆனா உங்க அப்படி செய்யல என கூறுகிறார். இதனால் கண்ணன் அண்ணன்கள் மீது கோபம் கொள்கிறான். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.

நாளைய எபிசோடில் தன்னுடைய வீட்டிற்கு சென்று என்னுடைய அம்மாவோட முகத்தை கடைசி வரைக்கும் எனக்கு காட்டாமல் எப்படி எடுத்துட்டு போகலாம் என சத்தம் போடுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.