Pandian Stores Episode Update 19.10.21

மருத்துவமனையில் இருந்து வந்த கையோடு கண்ணனுக்கு குழந்தையை காட்டுகிறார் தனம்.

Pandian Stores Episode Update 19.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். தனத்திற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து மூன்றாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். தனம் பாப்பாவை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வருவதால் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என முல்லை வீட்டை துடைத்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கஸ்தூரி கதிரை தேடிக்கொண்டு வருகிறார். அப்போது மீனாவும் வர முல்லை துடைத்துக் கொண்டே இருந்ததால் தண்ணீர் வழுக்கி கீழே விழப் பார்த்தார். கஸ்தூரி கூப்பிட்டதை தொடர்ந்து அதிரும் உள்ளே வர அவரும் வழுக்கி விழ பார்த்த நேரத்தில் முல்லை அவரை தாங்கிப் பிடிக்கிறார்.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

அதன்பிறகு கதிரும் மீனாவும் தனத்தின் வருகைக்காக வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்வீட்டில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் பாப்பாவை பார்ப்பதற்காக வெளியே நின்று கொண்டிருக்கின்றனர். அனைவரும் எதிர்பார்த்தபடி தனம் பாப்பாவுடன் காரில் வந்து இறங்குகிறார். அவருக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கின்றனர். மூர்த்தி உட்பட அனைவரும் உள்ளே சென்றபிறகு எதிரில் பாப்பாவை பார்க்க காத்துவந்த கண்ணனுக்கு தன்னுடைய குழந்தையின் முகத்தை காட்டுகிறார் தனம். இதனை கதிர் மீனா மற்றும் முல்லை ஆகியோர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

நீங்களே பேசிட்டு இருந்தா நான் எப்படி பேசுறது? – கடுப்பான Andrea Jeremiah | HD

தன்னுடைய அண்ணியின் மகனைப் பார்த்த கண்ணன் அப்படியே கண் கலங்கி அழுகிறார். பிறகு தனத்தின் அம்மா அவரை கூட்டி கொண்டு உள்ளே செல்கிறார். அனைவரும் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க மூர்த்தி தன் அம்மா அமரும் நகரும் நாற்காலியைக் கொண்டுவந்து நிற்க வைத்து விட்டு அதில் அவருடைய போட்டோவை வைத்து தன்னுடைய மகனை காண்பித்து கண் கலங்குகிறார். என்னுடைய மகனுக்கு உங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கவேண்டும் அவனை நீங்க தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

பிறகு அத்தை இல்லாததை எண்ணி தனமும் கண் கலங்குகிறார். பிறகு அனைவரும் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்கின்றனர். கடையில் இருந்து நீக்கி வீட்டிற்கு வருகிறார். என்ன இப்போ தான் கடைக்கு போனீங்க அதுக்குள்ள வந்துட்டீங்க என தனம் கேட்கிறார். அதற்கு மீனா மாமாவுக்கு பையனை பார்க்கணும் போல இருந்திருக்கும் அதுதான் வந்துட்டார் என்ன மாமா சரிதானே என கேட்கிறார். கஸ்தூரி இனி மூர்த்தி அண்ணன் பாண்டியன் ஸ்டோர் கடையில பார்க்க முடியாது பையனோட தான் பார்க்க முடியும் என கூறுகிறார்.

மூர்த்தி மீனாவோட அப்பா அம்மா உன்னையும் பாப்பாவையும் பார்க்க வருவதாக சொன்னார்கள், அதனால்தான் சீக்கிரமா வந்து விட்டேன் என கூறுகிறார். தனம் கஸ்தூரியிடம் நேற்று மீனாவோட அம்மா தான் ஹாஸ்பிடலுக்கு சாப்பாடு கொடுத்தாங்க எனக்கு ஒரு தெரியுமே அம்புட்டு ருசியா இருந்துச்சு என கஸ்தூரி கூறுகிறார். அதுக்கு முந்தின நாள் முல்லை கொடுத்து அனுப்பியது தான் சப்புனு இருந்துச்சு எனக்கூற அத்தாட்சி இனி என் கையாள பச்சைத்தண்ணி கூட கிடைக்காது என கூறுகிறார். உடனே கஸ்தூரி நான் சும்மா சொன்னேன் டி என கூறுகிறார். அத்த பொண்ணுனு கூட கிண்டல் பண்ண விட மாட்டுறா என கூறுகிறார். மீனா வீட்டிலேயே சமைத்துக் கொடுத்தது தான் நல்லா இல்லை என கூற எங்க அம்மா வருவாங்க அவங்க கிட்ட சொல்றேன் என மீனா கூறுகிறார். என்னாடி எது சொன்னாலும் கேட் போடுறீங்க என கஸ்தூரி கூற வீட்டில் அனைவரும் சிரிக்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.