கண்ணனின் அம்மாவை பார்க்க போன ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்த்துக் கொள்ளாமல் திட்டி அனுப்பி வைத்தனர்.
Pandian Stores Episode Update 16.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத அவருடைய அம்மா உயிரிழந்தார்.
மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் மையம் : தமிழக சுகாதாரத்துறை தொடங்கியது
ஜகா முல்லையின் பெற்றோருக்கு தகவல் சொன்னதையடுத்து அவர்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். அவர்களை தொடர்ந்து மீனாவின் அப்பா ஜனார்த்தனனுக்கு தகவல் சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவும் கடையில் இருக்கிறார்.
ஜனார்த்தனன் ஐஸ்வர்யாவுக்கு விஷயத்தை கூறி கண்ணனுக்கு சொல்லி விடுமாறு செல்கிறார். செல்போன் இங்கே இருக்கிறது என ஐஸ்வர்யா கூற சரி நான் சொல்லி விடுகிறேன் என கூறுகிறார்.
இதனையடுத்து என்னால் தான் இப்படி ஆயிடுச்சு என அழுது அழுது ஐஸ்வர்யா மயக்கம் போட்டு விழுகிறார். பின்னர் அவரே மயக்கம் தெளிந்து எழுந்ததும் கண்ணனின் போன் அடிக்கிறது. கண்ணனாய் இருக்குமோ என போனை அட்டென்ட் செய்ய வேறு யாரோ பேசிவிட்டு போனை வைத்து விடுகின்றனர்.
முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா?
இதனையடுத்து ஐஸ்வர்யா கண்ணனின் அம்மாவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு செல்கிறார். முல்லையின் அம்மா எங்கே அந்த எதற்கு வந்த என அவரை திட்டி தீர்த்து தள்ளிவிடுகிறார். இதனையடுத்து ஜனார்த்தனன் அப்படி ஓரமா போய் நில்லும்மா என சொல்ல ஓரமாக போய் நின்று அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.