கண்ணனை தனம் வீட்டுக்கு கூட்டி வந்த நிலையில் மூர்த்தி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என தெரியவில்லை.

Pandian Stores Episode Update 15.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணனை வீட்டிற்குள் கூட்டி வந்த தால் மூர்த்தி கோபத்தோடு வெளியே கிளம்பினார். இதனையடுத்து தனது ஜீவா மற்றும் கதிரிடம் இவன் எங்க இருக்க உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்க ஜீவா எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என சொன்னார். பிறகு கதிர் அண்ணா எடுக்கிற முடிவுக்கு நான் எப்படி எப்பவும் சரின்னு சொல்லுவோமோ அதே மாதிரி நீங்க எடுக்கிற முடிவும் சரினு தான் சொல்லுவோம் என கூறுகிறார்.

பிறகு மீனா மற்றும் முல்லையிடம் கேட்க அவர்கள் ஒரு பிரச்சனையும் இல்லை என கூறி விடுகின்றனர். பிறகு மூர்த்தி வெளியே நின்று கொண்டு பைக்கில் காத்துக் கொண்டிருக்க ஜீவா அண்ணன் வெளியே தான் இருக்கு நான் கிளம்புகிறேன் என கிளம்பிவிடுகிறார். பிறகு இருவரும் வண்டியில் போகும்போது அண்ணி மேல கோபப்படாதீங்க அவங்க கண்ணன் மேல இருக்கிற பாசத்துல தான் இப்படி செய்கிறார்கள். நீங்களும் அண்ணியும் பேசாம இருந்தா நல்லா இருக்காது என கூறுகிறார். மூர்த்தி பேசாம வாடா என சொல்லிவிட்டு கண்ணனை வீட்டிற்கு கூட்டி வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். இதனை ஜீவா பைக் கண்ணாடி வழியாக பார்க்கிறார்.

இந்தப் பக்கம் கண்ணன் தனத்தின் வைத்து கொஞ்சி கொண்டு இருக்கிறான். அனைவரிடமும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். உன்னை நீ என்ன சொல்றதுன்னு தெரியல எங்களால பிரச்சனை வேண்டாம் என கூறுகிறார். ‌‌ தனம் நான் என்ன சொல்றேனோ அத மட்டும் செய் என கூறுகிறார். என்ன சொன்னா தான் வருவேன் நீ சொன்னா இருக்க மாட்டியா என்ன முல்லை கேட்க அதெல்லாம் இல்லை இருப்பேன் என கண்ணன் கூறுகிறான். இதுக்காகத்தானே இவ்வளவு நாளா காத்துகிட்டு இருந்த இப்போ என்ன என ஐஸ்வர்யாவும் கேட்கிறார்.

இந்த பக்கம் முல்லை கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது வந்த மீனா இதிலே தனம் அக்கா நினைச்சா ஏதாவது ஒரு விஷயத்தை உடனே செய்ய முடியாது மாமா நினைச்சா இப்படி பண்ண முடியுமா? இன இந்த வயசு பொண்ணு வேற என்னெல்லாம் பண்ணப் போகுது என சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஐஸ்வர்யா வந்துவிடுகிறார். உடனே என் பேரு ஏதோ அடிபடுது எனக் கேட்க நான் சும்மா தான் பேசிட்டு இருந்தேன் என மழுப்பி மீனா அங்கிருந்து கிளம்பி விடுகிறார். என்ன பத்தி என்ன பேசினீங்க என முல்லையிடம் கேட்க அவர் எனக்கு நிறைய வேலை இருக்கு என கிளம்பிவிடுகிறார்.

அதன்பிறகு முல்லை கதிருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்கிறார். எங்க உங்களை அடிக்கறதுக்கு யாராச்சும் வந்துடுவாங்க என்று பயமாயிருந்தது வீட்ல இருக்க முடியல அதனால தான் வந்து விட்டேன் என முல்லை என்கிறார். பிறகு அவருக்கு சூப் கொடுக்கிறார். இருவருக்கும் இடையே கொஞ்சம் ரொமான்ஸ் நடக்கிறது.

இந்தப் பக்கம் மீனா வீட்டில் கண்ணனிடம் ஐஸ்வர்யா உன்ன நல்லா பார்த்துக்கிறாளா என கேட்கிறார். ‌‌ ஐசு நல்ல பொண்ணு எனக்காக ரொம்ப கஷ்டப்படுற என கூறுகிறார். பிறகு ஐஸ்வர்யா எங்கே என பார்க்க எதிர் வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வந்து இந்த வீட்டில் வைக்கிறார். தனம் என்ன அவசரம் என கேட்க இப்போ இங்கேயே இருனு சொல்லிட்டீங்க அப்புறம் மனசு மாறி போனு சொல்லிட்டா என்ன செய்வது என ஐஸ்வர்யா கூற தனத்தின் முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.