மீண்டும் வீட்டுக்கு வந்த கண்ணனை தனம் அம்மா திட்டி அனுப்பினார்.
Pandian Stores Episode Update 11.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஜனார்த்தனன் கடையில் வேலைக்கு சேரியில் உள்ள கண்ணன் டெலிவரி கொடுத்துவிட்டு கடைக்குச் செல்லும்போது தன்னுடைய வீட்டிற்கு செல்கிறார்.
இப்படியொரு கேப்டன் பதவி, எனக்கு தேவையில்லை.. ரஷித்கான் ராஜினாமா..
தனத்தின் அம்மா வெளியில் யாரோ எட்டிப் பார்ப்பது போல இருப்பது என உங்களிடம் கூற முல்லை வெளியே சென்று பார்க்க கண்ணன் நின்று கொண்டிருக்கிறார். பின்னாடியே யாரு என்ன என்று கேட்டுக்கொண்டே அவரும் செல்கிறார். இதுவரையில் பார்த்த கண்ணன் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க இருவருமே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர்.
இதனையடுத்து கண்ணன் அம்மா குறித்து நலம் விசாரிக்கிறார். ஹாஸ்பிடலுக்கு போயிருந்த யாரும் என்னை பார்க்க விடல. அம்மா மட்டும் ஒரு முறை பார்த்துக்கிறேன். அவங்ககிட்ட பேசக்கூட இல்லை எனக் கூறுகிறார்.
தனம் பதில் சொல்லாமல் உள்ளே செல்ல முல்லையும் உள்ளே சென்று விடுகிறார். அதன் பின்னர் தனத்தின் அம்மா வெளியே வந்து அவளை நிம்மதியாக இருக்க விட மாட்டியா. அவர் நிம்மதியா இருக்கணும் நீ நெனச்சா இந்த வீட்டு முன்னாடி வராத என்று திட்டி அனுப்பி விடுகிறார்.
இதனால் கண்ணன் அங்கிருந்து கிளம்பி விடுகிறான். மணி பத்தரைக்கு மேல் ஆகியும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கடையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அன்றைய கணக்கை இன்றே முடித்துவிட வேண்டும் என கணக்குப் பார்த்து ஜனார்த்தனனிடம் ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார் ஐஸ்வர்யா. நேரமாச்சு நாளைக்கு பாத்துக்கலாம் என கூறியுள்ளார். இல்லைங்க சார் அன்னைக்கு கணக்கு அன்னைக்கு பார்த்துடணும் ஒரு முறை பார்த்து விடுங்கள் எனக் கூறுகிறார். கணக்கு சரியாக இருக்கிறது எனக் கூறுகிறார் ஜனார்த்தனன்.
சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
அதன் பின்னர் சமைப்பதற்காக 3 முட்டை மற்றும் ஒரு பிரட் பாக்கெட் எடுத்துக்கொண்டு அதற்கான பில் தொகை 50 ரூபாயை ஐஸ்வர்யா கொடுக்க ஜனார்த்தனன் வேண்டாம் என கூறுகிறார். ஆனால் அதெல்லாம் கணக்கு சரியாக இருக்க வேண்டும் என ஐஸ்வர்யா 50 ரூபாய் கொடுத்து விடுகிறார்.
அதன் பின்னர் இருவரும் வீட்டுக்கு கிளம்ப ஜனார்த்தனன் நாளை காலை 5 மணிக்கு வந்து விடு என கண்ணனிடம் கூறுகிறார். திருச்சி வரைக்கும் போயிட்டு வரணும் என கூற கண்ணனும் வந்து விடுகிறேன் என கூறி விட்டு கிளம்பி விடுகின்றனர். இன்னொருபுறம் மூர்த்தியின் அம்மா அவரது கையால் சாப்பாடு ஊட்டி விடச் சொல்கிறார். இதெல்லாம் திரும்பவும் எப்ப நடக்குமோ தெரியாது என முற்றிலும் வித்தியாசமாக பேசுகிறார். இதனால் அவரது மன நிலையில் என்ன இருக்கிறது என தெரியாமல் கதிரும் ஜீவாவும் குழம்புகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.