தட்டில் பாலுடன் கண்ணன் வீட்டுக்கு சென்று உள்ளார் ஐஸ்வர்யா.
Pandian Stores Episode Update 09.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். எதிர் வீட்டுக்கு குடி வந்த ஐஸ்வர்யா கண்ணன் வீட்டில் உள்ளவர்கள் பார்க்கும் வகையில் கோலம் போட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் அனைவரும் கயில் நடப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதனை வீடியோவாக எடுத்து கயல் வளர்ந்த பிறகு காட்ட வேண்டும் என கூறிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் கயல் பேசத் தொடங்கியது என தான் முதலில் பெரியம்மா எனக் கூப்பிடுவா என்று தனம் சொல்ல மீனா என்ன தான் அம்மான்னு கூப்பிடுவானு சொல்கிறார்.
இங்கே கஸ்தூரி பின்பக்கம் வழியாக வீட்டிற்கு வந்து பாலை காய்ச்சுகிறார். பால் காய்ச்சிய பிறகு ஐஸ்வர்யா ஆறு டம்ளரில் பாலை எடுத்துக்கொண்டு கண்ணன் வீட்டுக்கு செல்கிறார். கண்ணன் போக வேண்டாம் என கூறியும் கஸ்தூரி நீ போ என கூறி ஐஸ்வர்யாவை அனுப்பி வைக்கிறார். வீட்டுக்கு போன ஐஸ்வர்யாவை பார்த்து மீனா ஷாக் ஆகிறார். உங்களின் சண்டை எடுக்க வந்துட்டியா இங்கிருந்து போய்விடு என மீனா கூறுகிறார். நான் சண்டை போட வந்தா இந்த கையில பாலை எதுக்கு எடுத்துட்டு வர போறேன் என கூறுகிறார். அதற்குள் தனம் யார் யார் எனக்கேட்க ஐஸ்வர்யா உள்ளே நுழைகிறார். இவ எதுக்கு இங்க வந்தா அன்னைக்கு சாவியை கேட்டாலே அதை வாங்கிட்டு போக வந்தாலா என கூறுகிறார் தனம். அதற்கு மீனா இல்லை அக்கா அவ கையில பாருங்க அவ வேற ஏதோ திட்டத்தோட வந்திருக்கா என கூறுகிறார்.
அதன் பின்னர் ஐஸ்வர்யா புதிதாக எதிர் வீட்டுக்கு குடிவந்து இருக்கும். நானும் என்னுடைய கணவர் கண்ணனும் இங்கேதான் இருக்கப் போகிறோம். இன்னைக்கு தான் பால் காய்ச்சும் நீங்க எல்லாரும் ஒரு நாள் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும். என்னுடைய கணவரோட வீட்டிலேயும் இப்படித்தான் கூட்டுக்குடும்பமா இருப்பாங்க. கல்யாணத்துக்கு பிறகு எல்லாரையும் அவர் மிஸ் செய்கிறார். நீங்க எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்தா அவ ரொம்ப சந்தோஷப்படுவார் என கூறுகிறார். அதன் பிறகு எல்லோருக்கும் பாலைக் கொடுக்க யாரும் எடுத்துக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்கின்றனர். சரி நான் இங்கே வச்சிட்டு போகிறேன் அப்புறம் குடிங்க. சாயங்காலம் வந்து தட்டையும் டம்ளரையும் எடுத்து கொள்கிறேன் என கூறுகிறார். அப்போது கயல் பாப்பாவைப் பார்த்து விட்டு ஐ பாப்பா என கயலை தூக்கி கொஞ்சுகிறார்.
Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan | Vetri Theatre | Chennai
கண்ணனோட அண்ணன் பாப்பா பேரும் கயல் தான். கல்யாணத்துக்கு பிறகு பாப்பாவை பார்க்க முடியாமல் ரொம்ப மிஸ் செய்கிறார் என கூறிவிட்டு கயலை தூக்கிக்கொண்டே கிளம்புகிறார். உடனே மீனா ஹேய் பொண்ணு அது என் குழந்தை என கயலை வாங்கிக் கொள்கிறார். பின்னர் வீட்டுக்கு போன ஐஸ்வர்யாவிடம் கண்ணன் அண்ணனுங்க எதுவும் சொல்லலையா ஏதாச்சு பிரச்சனை ஆச்சா என கேட்கிறார். அதெல்லாம் யாரும் எதுவும் சொல்லல எனக் கூறுகிறார்.
பின்னர் கஸ்தூரி நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் சீக்கிரம் அந்த குடும்பத்தோட சேரணும் அதுதான் என்னுடைய ஆசை என கூறுகிறார். சித்தி நாங்க அந்த குடும்பத்தோட சேரதுல உனக்கு அவ்வளவு ஆசையா.? அதைத்தான் என்னால நம்ப முடியல என ஐஸ்வர்யா கூறுகிறார். ஒருவழியாக சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கஸ்தூரி. ஐஸ்வர்யாவை அண்ணன்கள் எதுவும் சொல்லாததை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார் கண்ணன். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.