கயல் பிறந்தநாள் விஷயத்தில் மூர்த்தி எடுத்த முடிவால் மீனாவின் அப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Pandian Stores Episode Update 06.12.21 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கயலின் பிறந்தநாளை மண்டபத்தில் வைத்து கொண்டாட முடியாது வீட்டில் வைத்து கோலாகலமாக கொண்டாடும் என மூர்த்தி சொல்லி விடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா பாப்பா பிறந்தநாளுக்கு இதெல்லாம் பார்க்கணும்னா மாமா என கேட்கிறார். ஆனால் மீனா எவ்வளவு சொல்லியும் அவரை சமாதானம் செய்வதும் தான் அனைவரும் இருந்தனர். ஒரு கட்டத்தில் மீனாவும் சரி என சொல்லி விடுகிறார். ஆனால் மூர்த்தி எழுந்து சென்றதும் ஜீவாவிடம் சண்டை போடுகிறார். பிறகு எழுந்து உள்ளே செல்ல கதிர் போங்க போய் சமாதானப் படுத்துங்கள் என ஜீவாவை அனுப்பி வைக்கிறார்.
2 டோஸ் தடுப்பூசியில், நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லையா? : மத்திய அரசு புதிய முடிவு
ரூமுக்குள் மீனா கயல் பாப்பாவுக்கு மட்டும்தான் இப்படி நடக்குது. ஆனா நாளைக்கு தனம் அக்கா பையனுக்கு கோலாகலமா பிறந்தநாள் கொண்டாடுவாங்க. பெயர் வைக்கிற விழாவில் கூட அவனுக்கு முதல் தொட்டில் ஆனால் கயல் பாப்பாவிற்கு பழைய தொட்டில்ல தான் போடணும் சொல்லிட்டாங்க என பேச ஜீவா ஏன்டி இப்படி எல்லாம் யோசிக்கற. நல்லபடியாக நீ யோசிக்க மாட்டியா? கையில் தான் இந்த வீட்டோட முதல் வாரிசு. இன்னைக்கு மூர்த்தி அமை இருக்கிற மாதிரி நாளைக்கு இவதான் கெத்தா இந்த குடும்பத்தை வழி நடத்துவார். அம்மா கூட கயல் பாப்பாவை தூக்கி கொஞ்சி விட்டு தான் இறந்தாங்க என சொல்ல இது எல்லாம் நான் யோசிக்கவே இல்லை என மீனா மகிழ்ச்சியோடு சொல்கிறார்.
அதன் பிறகு மறுநாள் காலையில் அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க மீனா குழந்தையின் முகத்தை உற்று உற்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை அனைவரும் கவனிக்கின்றனர். அதன்பிறகு மூர்த்தி என்னப்பா குழந்தை முகத்தை அப்படியே பாத்துட்டு இருக்க என கேட்க பார்க்கறதுக்கு அப்படியே பெரியம்மா ஜாடை தெரியுது என கூறுகிறார். என்னப்பா நீ முதல்ல எல்லாம் எங்க ஜாடை தெரியுது இல்ல இப்ப அவங்க ஜாடை தெரியுதுன்னு சொல்ற என மூர்த்தி கேட்க தூங்கும்போது அப்படித்தான் மாமா தெரியுது என கூறுகிறார்.
ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh
அதற்கு அடுத்ததாக மீனாவின் அப்பா வீட்டிற்கு வருகிறார். பிறகு கண்ணன் மேல தெரியாமல் சந்தேகப்பட்டுட்டேன் மன்னிச்சிடுங்க மூர்த்தி என கூறுகிறார். எனக்கு அந்த சிசிடிவி கேமரா இருக்கிற ஞாபகமே இல்லை என கூறுகிறார். அதன் பிறகு கயல் பிறந்தநாள் பற்றி விசாரிக்க வீட்டிலேயே பண்ணலாம் என முடிவு செய்திருக்கோம் என கூறுகிறார் மூர்த்தி. இதனால் அதிர்ச்சியான மீனாவின் அப்பா என்ன சொல்றீங்க என கேட்கிறார். உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை அம்மா எழுந்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள பெருசா விழா எதுவும் பண்ண கூடாது அதனாலதான் என சொல்கிறார். நீங்க கூட்டிட்டு வர உங்கள கூட்டிட்டு வாங்க வீட்டிலேயே இவ்வளவு சிறப்பா பண்ண முடியுமா என வியந்து போற அளவுக்கு பண்ணிடுவோம் என கதிர் கூறுகிறார். அதன்பிறகு மீனாவும் நான் அம்மா கிட்ட கேட்டுட்டு என சொல்ல சரி என்று சம்மதம் கூறியுள்ளார் ஜனார்த்தனன்.
இந்த பக்கம் ஜீவாவும் மூர்த்தியும் டெலிவரிக்காக ஒரு இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே பணத்தை திருடிவிட்டு கண்ணன் மீது பழி விழ காரணமாக இருந்தவர் ஜீவாவை இடித்து விட்டு செல்கிறார். கண்ணன் அந்த பையனை கூப்பிட அவனும் வருகிறான். ஜீவா இவன்தான் பணத்தை தூங்கிவிட்டு கண்ணன் மேலே பழி போட்டான் என கூறுகிறார். நான் ஒன்னும் பழி எல்லாம் போடல அவனா வந்து மாட்டிக்கிட்டான் என்று அந்தப் பையன் சொல்கிறான். கண்ணன் மட்டும் என்ன யோக்கியமா? ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி அவங்க அம்மாவையே காலி பண்ணிட்டான் என சொல்ல பளார் என அறைகிறார் கதிர். என் மேலயே கை வச்சிட்டீங்க உங்கள சும்மா விடமாட்டேன் என வசனம் பேசிவிட்டு அந்த பையன் கிளம்புகிறான். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட்.