Pandian Stores Episode Update 06.10.21

புதிய கடையை கட்ட மீனா செய்த உதவியால் குடும்பத்தார் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர்.

Pandian Stores Episode Update 06.10.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டிற்கு வந்த மூர்த்தி தன்னுடைய மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் முல்லையின் அப்பா வீட்டிற்கு வந்தார். முல்லை மற்றும் மீனா ஆகிய போனில் ரிங்டோன் வைப்பது எப்படி என பேசிக் கொண்டிருந்தனர்.

புள்ளிகள் பட்டியலில், மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி : மற்ற அணிகள் நிலை..

கதிருக்கு தனியாக காதல் ரிங்டோன் வைக்க கேட்டுக்கொண்டிருந்தார் முல்லை. இந்த ஆர்வத்தில் தன்னுடைய அப்பா வந்ததை கூட கவனிக்காத அவரை வீட்டில் இருந்தவர்கள் கிண்டல் செய்தனர். அதன் பின்னர் அனைவரும் வீட்டில் ஒன்றுகூட மூர்த்தி புதிய கடை கட்டுவது திட்டத்தை கூறினார். பின்னர் ஜீவா நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்று வந்தோம் நம்மிடம் இருக்கும் பணம் கடையை கட்டுவதற்கு போதாது எனக் கூற உடனே தனம் தன்னுடைய நகையை கொண்டு வந்து கொடுத்தார். முதலில் வாங்க மறுத்த மூர்த்தி இதன் பின்னர் சமாதானம் செய்து அவர் நகையை கொடுத்தார். அதே நேரத்தில் மீனாவும் தன்னுடைய கையை கொண்டு வந்து கொடுக்க மீனாவா இப்படி என அனைவரும் ஷாக் ஆகினர்.

Beast படத்தின் அடுத்தடுத்த 3 அப்டேட்கள் – இந்த மாதத்தில் கொண்டாட தயராகுங்கள்! | THalapathy VIjay

உடனே ஜீவா மீனா நீ அது இது என கேட்க என்ன நான் எது சொன்னாலும் நீயா இது நீயா இது என்று கேட்கிற இது என் குடும்பம் தானே என பேசுகிறார். தன்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லாததால் முல்லையின் முகம் சுருங்குகிறது. பின்னர் உள்ளே ரூமில் சென்று இதில் நினைத்து வருத்தப்பட கதிர் அவரை சமாதானம் செய்கிறார்.

இந்தப் பக்கம் மல்லி தன் அப்பா அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கஸ்தூரி வருகிறார். கஸ்தூரி மல்லியிடம் ஐஸ்வர்யாவை எதிர் வீட்டில் குடி வைக்க இருப்பதாக கூறுகிறார். ஐஸ்வர்யா பாண்டியன்ஸ்டோர் வீட்டிற்குள் நுழைந்தால் போதும் அதன் பின்னர் தனத்தின் நிலைமை மாறும். ஐஸ்வர்யா நீ நினைக்கிற மாதிரி இல்ல‌‌. ‌ அவ உள்ளே சென்றதும் தினமும் பிரச்சனை நடக்கும். அப்புறம் நாம நெனச்சது எல்லாம் நடக்கும் என கஸ்தூரி கூறுகிறார். இதனைக்கேட்ட மல்லி இந்த குடும்பம் நாசமாகப் போகட்டும் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

மேலும் சீரியல் முடிந்த பிறகு வெளியான ப்ரோமோவில் உன்னுடைய அத்தையை சங்கத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வீட்டிற்குச் செல்கிறார் கதிர். அடுக்கு மல்லி என்ன ஏது என விசாரிக்க அவருடைய அப்பா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாப்பிள்ளை தான் ஒவ்வொரு மாதமும் செக்கப்பிற்கு கூட்டி செல்கிறார் என கூற கண்டவங்க எல்லாம் கூட்டிட்டு போக தேவையில்லை. உங்களுக்கு ஏதாச்சும் என்றால் பார்ப்பதற்கு நான் இருக்கேன் என மல்லி கூறுகிறார்.