சித்ராவின் தற்கொலை குறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் உட்பட மற்ற நடிகர்களும் உருக்கமாகப் பேசி உள்ளனர்.
Pandian Stores Actors About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா.
பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் தற்போது தான் இந்த சீரியல் மூலம் நடிகையாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர்தான் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. அதன் பின்னர் இவர்களுக்கு பதிவுத் திருமணமும் நடைபெற்றுள்ளது.
இப்படியான நிலையில் சித்ரா நேற்று அதிகாலை பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இந்த தற்கொலை சின்னத்திரையில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பலரும் ஏன் சித்து அக்கா இப்படி ஒரு முடிவு எடுத்தீங்க என புலம்பி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்களும் சித்ராவின் தற்கொலை குறித்து பேசியுள்ளனர்.
ஹேமா சதீஷ் கூறியதாவது ஏண்டி இப்படி பண்ண? நீ இப்படி பண்ணக்கூடிய ஆளு இல்ல.சொல்றதுக்கு வார்த்தையே இல்ல அதிர்ச்சியா இருக்கு என தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி நல்ல நடிகர் இப்போது நம்முடன் இல்லை. அவர் இறந்ததாக கேட்ட செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என நினைத்துதான் ஓடிவந்தோம் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
முல்லைக்கு ஜோடியாக நடிக்கும் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பலருக்கும் நீ இன்ஸ்பிரேஷனாக இருந்தாய். போல்டான பெண்மணி என கூறி அவருடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்.