நடிகையடன் தகாத உறவில் இருப்பதாக பரவிய தகவலுக்கு பகல் நிலவு அசீம் முதல் முறையாக பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் அசீம். இதற்கு முன்னர் பல சீரியல்களில் துணை வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல் தான் அவரை பிரபலப்படுத்தியது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் பகல் நிலவு அசீம் நடிகை ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக தகவல் ஒன்று பரவியது.
இது குறித்து அசீம் பேச மறுத்துள்ளார். மேலும் அது என்னுடைய பெர்சனல் என கூறிய அவர் மகனுடைய புகைப்படத்தை வெளியிட்டு இவன் தான் என் உலகம், இவனை தவிர வேறு எதுவும் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.