Pa Ranjith to make Tamil film Again :
2012-ம் ஆண்டு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித்.
முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.
இந்தியன் 2 கைவிட்டா என்ன.. ஷங்கருக்கு அடிச்ச மிகப்பெரிய ஜாக்பாட்; லேட்டஸ்ட் அப்டேட்!
6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்த படம் துவங்க தாமதமாவதால் தமிழில் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.
வட சென்னை பாக்ஸிங்கை மையப்படுத்திய இப்படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, சத்யராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.