நான் சொன்னதை அண்ணன் திருமா வுக்கு எதிராக திசை திருப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.
Pa Ranjith About Controversy Tweet : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். இவர் ஒரு தரப்பு சார்ந்த படங்களை எடுத்து வருபவர்.
இதனையடுத்து எவ்வளவு நாளைக்குத்தான் ஆண்ட இனத்தை குறை சொல்லிக் கொண்டே இருப்பார் என கூறி மோகன்ஜி அவருக்கு எதிராக படங்களை எடுக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரத்தின் விளையாட்டை தேவையின் பொருட்டு ஆளுக்கொரு முறையாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டக்காரர்களுக்கு தெரிந்தே இருக்கிறது பலி கொடுக்கப்பட வேண்டிய ஆடுகளின் குரல்களை. விடுதலையின் சுவை அறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் !! ஆகா என்ன சுவை😁 என்று கூறியிருந்தார்.
இவரின் இந்தப் பதிவு திருமாவுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்னொரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு , எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள்.
ஆடுகள்:தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள் என அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இக்கருத்தை அண்ணன் திருமாவுக்கு எதிராக திசை திருப்பும் வேலையை விட்டு விட்டு , எல்லா அரசியல் கட்சிகளும் தலித் மக்களை எப்படி அதிகாரத்திற்க்காக கையாளுகிறார்கள் என்கிற உண்மையை உணருங்கள்.
ஆடுகள்:தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்.— pa.ranjith (@beemji) May 23, 2020