P.T.Selvakumar

P.T.Selvakumar : மக்கள் மகிழ்ச்சியாக வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 122 இடத்தில் இருந்து 133-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதை பற்றி தன்னுடைய ஆதங்கத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரான பி.டி செல்வகுமார்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் புலி படத்தை தயாரித்து இருந்தவர் பி.டி செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவருமான இவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை யாரும் செய்திராத அளவிற்கு மிக பெரிய உதவிகளை செய்துள்ளார், தொடர்ந்து செய்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் 122-வது இடத்தில் இருந்த இந்தியா 133-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டதை பற்றி கருத்து கேட்டிருந்தோம்.

அதற்கு செல்வகுமார் அவர்கள் மிகுந்த வேதனையுடன் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது அவர் கூறியதாவது,

இன்று மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 133-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது வேதனைக்குரிய விசியம், வருத்தபட வேண்டிய ஒன்று என கூறியுள்ளார்.

மேலும் அரசியல் அமைப்பும், அரசியல் வாதிகளும் மக்களை மத வாரியாகவும், சாதி வாரியாகவும், மொழி வாரியாகவும் பிரித்து அரசியல் செய்வது தான் இந்த பின்னடைவுக்கு காரணம்.

500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த ஒற்றுமை தற்போது இல்லை.. அரசியல் என்ற போர்வைக்குள் இந்தியாவில் உள்ள வளங்கள் அனைத்தும் ஒரு சிலரால் மட்டுமே சுரண்டப்பட்டு வருகிறதா? என்ற கேள்வி தான் எழுகிறது.

வருடத்திற்கு ரூ 100 கோடி சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கும் சரி சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாமானிய மக்களுக்கும் சரி ஒரே மாதிரியாக GST வரி விதித்தால் வளர்பவர்களின் வளர்ச்சி என்னவாகும்?

சாமானிய மக்களின் வியாபாரம், வளர்ச்சி அனைத்துமே தடைபடும் பின்பு அவர்களால் எப்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்?

உதாரணமாக டென்மார்க் கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்த்தே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

காரணம் அங்குள்ள ஒற்றுமை, தொழிலுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை தான் காரணம். டென்மார்க்கில் உள்ள அரசியல் மக்களுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே செயல்படுகிறது.

ஆனால் இந்தியாவில் பிரிவினைவாத அரசியல் தான் நடந்து வருகிறது. தமிழகம் ஜி.எஸ்.டி கட்டுவதில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்து தர மத்திய அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

ஒரு சிலை வைக்க ரூ 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வெறும் ரூ 100 கோடி என சொற்பமான நிதியையே ஒதுக்குகிறது.

இதே நிலை நீடித்தால் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளை விட பெரிய அளவில் தடைபடும். மக்களுக்கு ஒரு பிரச்சனை எனும் போது இந்நாட்டின் அரசு அந்த பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்தால் இந்தியா மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தையே பிடிக்கும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.