டிஆர்பி காக பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சித்திரவதை குறித்து பதிவிட்டுள்ளார் ஓவியா.
Oviya About Bigg Boss Secrets : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
முதல் சீசனில் ஓவியா தற்கொலைக்கு முயன்றார், இரண்டாவது சீசனில் மகத் மற்றும் மும்தாஜ் பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது.
மூன்றாவது சீசன் மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஒரு சர்ச்சை இந்த நிகழ்ச்சியைச் சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த தற்கொலை முயற்சி எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில் ஓவியா பதிவிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
24 மணி நேரத்தில் சூர்யாவின் காட்டுப் பயலே பாடல் படைத்த சாதனை – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்
அதாவது அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அதே பதிவில் டிஆர்பிக்கு தற்கொலை செய்து கொள்ளும் வரை போட்டியாளர்களை சித்திரவதை செய்யக்கூடாது என்று நான் விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரப்ட் மட்டுமே, என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஓவியாவின் இந்த பதிவு குறித்து ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்