ஆரவ் திருமணத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அவரது திருமணம் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் ஓவியா பேட்டி அளித்துள்ளார்.
Oviya About Aarav Marriage : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீதனம் பங்கேற்று மிகவும் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஓவியா.
ஆரவ் மாடலிங் துறையை சார்ந்த நடிகர், ஓவியா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் பெரிய இடத்தை தேடிக் கொடுத்தது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டார். ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை நிராகரித்த தற்கொலை முயற்சி செய்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ் மீது காதலில் இருந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் தான் ஆரவ் இளம் நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் ஓவியா பங்கேற்கவில்லை.
இதுகுறித்து தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஆரவ் திருமணம் நடைபெற்றபோது நான் கேரளாவில் இருந்தேன். அதனால் அவரது திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை.
அவருக்கு திருமணம் முடிந்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் இருவருக்குள் இருந்தது முடிந்துவிட்டது, இனி இதைப் பற்றி பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.