O.S Manian : நாகை மாவட்டம் வேதாரண்யம் , கஜா புயலால் நிர்மூலமானது. ஆனால் அங்கு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் இதுவரை சரியாக கிடைக்கவில்லை.
மேலும் அதிகாரிகள் யாரும் இதுவரை சென்று பார்வையிடவும் இல்லை என்பதால் வேதாரண்யம் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்துள்ளனர்.
இதனால், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக , அத்தொகுதி எம். எல். ஏ வும், அமைச்சருமான ஓ. எஸ்.மணியன் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
கடந்த 17- ஆம் தேதி, வேட்டைகாரணிருப்பு பகுதியில் போராட்டம் நடந்தபோது, காரில் வந்த ஓ. எஸ்.மணியன் – ஐ சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் வேறு வழியின்றி, சுவர் ஏறி குதித்து தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 18- ஆம் தேதி ஒரு கிராமத்தை பார்வையிட உதவியாளரும் , அவரும் பைக்கில் சென்றுள்ளனர்.
அமைச்சரை கண்ட மக்கள் பைக்கை வழிமறித்து, ” பாதிக்கபட்ட எங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் செய்யாமல், எதற்கு எங்கள் கிராமத்திற்கு வருகிறீர்கள் ” என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அமைச்சர் ஓ. எஸ்.மணியன் மரியாதையாக பேசு! என்று கூறியுள்ளார். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், அமைச்சரை உடன் வந்த உதவியாளர் பைக்கில் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.