தன்னை நிராகரித்த நடிகர்கள் கூறிய காரணத்தை நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார் வாணி போஜன்.
தமிழ் சின்னத்திரை சீரியலில் நடிகையாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரை வரை உயர்ந்திருக்கும் பிரபல நடிகைகளின் ஒருவராக திகழ்பவர்தான் வாணி போஜன். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான ‘தெய்வமகள்’ என்ற மெகா தொடர் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இதன் மூலம் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன் அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் ‘ஓமை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்ததை தொடர்ந்து ‘டிரிபிள்ஸ்’ எனும் வெப் சீரிஸில் நடித்தார். அதனை தொடர்ந்து, அருண் விஜய் உடன் “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார். அது நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரின் விளம்பரத்திற்காக அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் உரையாடிய வாணி போஜன் தன்னை கஷ்டப்படுத்திய விஷயத்தை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் சினிமாவில் நடிப்பதற்காக நிறைய நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறாராம். ஆனால், அங்கு ‘இவங்க சீரியல் நடிகை அதனால் வேண்டாம்’ என்றே பல ஹீரோஸ் சொல்லிருக்காங்களாம். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல், தனக்கான சீரியலையும் முடித்துவிட்டு, காத்திருந்தாராம் அதில் கிடைத்த வாய்ப்பு தான் ஓ மை கடவுளே பட வாய்ப்பு என்பதை அந்த நேர்காணலில் மிகவும் உணர்ச்சி பூர்வமாக பார்கிர்ந்து கொண்டார்.