பழம் பெரும் நடிகையான கீதாஞ்சலி திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி ஆரின் ஆசை முகம், அன்னமிட்ட கை, சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கீதாஞ்சலி.
இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கீதாஞ்சலி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான ராம கிருஷ்ணா தான் என்பது குறிப்பிடத்தக்கது.