OBS Swami Darshan In Tirupati :
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் நிலையில், சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு சென்றார்.
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இருக்கும் விஸ்வாசம் தொடர்பு – மிரட்டல் தகவல்!
அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் பாலாஜி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இரவு திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்கிய ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேதபண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.
இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், பக்தர்கள் மற்றும் நிருபர்களிடம் கைகுலுக்கிவிட்டு சென்றுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவர உள்ள நிலையில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளார்.