O Panneerselvam to visit US
O Panneerselvam to visit US

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டதை அடுத்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8 -ஆம் தேதி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த செப்டம்பர் மாதம் அரசுமுறை பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மொத்தம் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், 14 நாட்கள் வெளிநாடு பயணம் செய்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வெளிநாடு பயணத்தை தொடர்ந்து, தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல இருக்கிறார். மொத்தம் 10 நாட்கள் பயணமாக அவர் அமெரிக்காவில் பல்வேறு இடங்களை பார்வையிட இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அமெரிக்கா செல்லும் துணை முதல்வர், அங்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்கா பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

எனவே நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவில் இவர்கள் இருவரும் பல்வேறு ஆலோசனைகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் பழனிச்சாமி கடந்த செப்டம்பர் மாதம் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்ற நிலையில் தற்போது துணை முதல்வரும் வெளிநாடு செல்ல இருக்கிறார்.