cctv2

விருத்தாசலத்தில் இரவு நேரங்களில் நிர்வாண கோலத்தில் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் வின்.என்.ஆர் நகரில் ஜமால் பாஷா என்கிற ஒரு தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள வீடுகளில் ஜன்னல் ஓரத்தில் வைக்கப்படும் செல்போன், வாட்ச் உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருந்தது. இதனால், அத்தெருவில் வசிக்கும் மக்கள் குழம்பிப் போனார்கள்.

cctv

இந்நிலையில், நேற்று அதிகாலை ரம்ஜான் அலி என்பவர் வீட்டின் அருகே சத்தம் கேட்டுள்ளது. அவர் வெளியே வந்து பார்த்த போது யாரும் இல்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அவர் ஆய்வு செய்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 50 வயதிக்குற்கு மேற்பட்ட ஒருவர் நிர்வாண கோலத்தில் அங்கிருந்து ஓடுவது பதிவாகியிருந்தது.

எனவே, இத்தனை நாடகளாக அந்த தெருவில் அவர்தான் பொருட்களை திருடி வந்திருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். அவர் யார்? ஏன் நிர்வாணமாக அலைகிறார் என்பது அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.