ரசிகர்களின் கண்ணைத் பறிக்கும் அளவிற்கு அழகான ஆடையை அணிந்துகொண்டு நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் நகைகளை குவித்து வருகின்றனர்.

மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் தான் நிவேதா பெத்துராஜ். இவர் ‘ஒரு நாள் கூத்து’என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியை அடுத்து ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 

அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் தனக்கான இடத்தை வகுத்துக் கொண்டுள்ளார். இவரின் நடிப்பில் வெளியான அல்லு அர்ஜுனின் வைகுண்டபுரம் படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் தமிழில்  கடைசியாக   வெளியான படம் பிரபுதேவாவின் பொன்மணிக்கவேல் இப்படத்திலும் நிவேதா பெத்துராஜ் அழகாக நடித்திருப்பார். 

இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது லைட் கிரீன் கலர் புடவை அணிந்து கொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து தனது சமூக இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் கண்ணை பறிக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறது. அதற்காக ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.