அசல் கோளாறுடன் காதல் என பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் நிவாஷினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளரில் ஒருவராக கலந்து கொண்டவர் நிவாஸினி. இவர் அசல் கோளாறுடன் நெருக்கமாக பழகி வந்த காரணத்தினால் இருவரும் காதலிப்பதாக சொல்லப்பட்டது.
அதற்கேற்றார் போல அசல் கோளாறு தொடர்ந்து நிவாசினியை அங்கும் இங்கும் தொடுவதும் முத்தமிடுவதுமாக இருந்து வந்தார். தற்போது இருவருமே அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிவாஸினி தனக்கும் அசலுக்கும் காதல் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் நான் சாப்பிடும் விதத்தை கிண்டல் செய்தார்கள். அது எல்லாம் தனியாக அமைந்து சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது எனக்கு அசல் தான் துணையாக வந்து சாப்பிடுவார். நான் வருத்தப்படும்போதெல்லாம் அசல் தான் ஆறுதலாக இருந்தார்.
முதலில் அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் தான் பழகினேன். அவர் யாரையும் தப்பான எண்ணத்தில் தொடவில்லை. நிறைய விஷயங்களை வீட்டிற்குள் பேசினோம். சில விஷயங்கள் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாக பேசியுள்ளார்.