ஜெயலலிதாவின் வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என நித்யா மேனன் பேசியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது வாழ்க்கையை படமாக்க பலர் ஆர்வம் காட்டினார்.
தற்போது இயக்குனர் பிரியதர்ஷினி என்பவர் நித்யா மேனனை வைத்து தி ஐயன் லேடி என்ற பெயரில் படம் எடுக்கிறார். அதே போல் கவுதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து வெப் சீரிஸ் தொடரை இயக்குகிறார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ஏ.எல் விஜய் கங்கானாவை வைத்து தலைவி படத்தை இயக்கி வருகிறார். தி ஐயன் லேடி பர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் வியக்க வைத்தது. காரணம் நித்யா மேனனுக்கு ஜெயலலிதா வேடம் கச்சிதமாக பொருந்தி இருந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தலைவி பர்ஸ்ட் லுக் வெளியாகி கண்டனங்களுக்கு ஆளானது.
ஏனென்றால் அந்த லுக் பார்ப்பதற்க்கு ஜெயலலிதா போலவும் இல்லை கங்கனா போலவும் இல்லை என்பது தான் குற்றசாட்டு.
இப்படியான சமயத்தில் நித்யா மேனன் எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவரும் நானும் பெங்களூரில் தான் படித்தோம். அவரிடம் இருக்கும் அதனை குணங்களும் என்னிடம் உள்ளன. இதனை ப்ரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.
அவருடைய வேடத்தில் நடிக்க நான் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நான் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க பொருத்தமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
தலைவி பர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு பிறகு நித்யா மேனன் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் சொல்வது உண்மை என்று தான் பலரும் கூறுகின்றனர்.