Nidhhi Agerwal Request To Fans

தனக்கு கோவில் கட்டிய ரசிகர்களிடம் அன்பு கோரிக்கை வைத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

Nidhhi Agerwal Request To Fans : தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் பூமி மற்றும் ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

மேலும் இந்த இரண்டு படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டானது. சமீபத்தில் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபட்டு வந்தனர்.

இதனை அறிந்த நிதி அகர்வால் நெகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கோரிக்கை ஒன்றையும் ரசிகர்களுக்கு விடுத்துள்ளார்.

தனக்கு கோவில் கட்டிய இடத்தில் கல்வி கற்பதற்காகவும் ஏழைகளுக்கு உணவருந்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கையை விடுத்துள்ளார் நிதி அகர்வால்.

இதனால் நிதி அகர்வால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.