சிம்புவின் மாநாடு படத்தின் பிரச்சனைகள் முடிந்து படப்பிடிப்புகள் தொடங்க இருந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர் சர்ச்சை நாயகனாக உருவெடுத்து விட்டார். இவர் ஷூட்ங்கிற்கு வருவதில்லை, சரியாக நடித்து கொடுப்பதில்லை, பாத்ரூமில் டப்பிங் பேசுகிறார் என்றெல்லாம் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்திருந்தன.
இதையெல்லாம் தாண்டி வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
இந்த படத்திற்கும் சிம்பு பிரச்சனை செய்கிறார் என கூறி படத்தை தயாரிப்பாளர் டிராப் செய்தனர். இதனையடுத்து பேச்சு வாரத்தையெல்லாம் நடந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. .
இதனால் மாநாடு தொடங்குமா? தொடங்காதா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது.