மாலை முரசு செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்கள் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News Reader Gopinath Commits Suicide : தமிழ் சினிமாவில் உள்ள பிரபல சின்னத்திரை பிரபலங்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகம தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
சமீபத்தில்தான் விஜய் டிவி பிரபலமான விஜே சித்ரா கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரைப் போலவே பல சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது மாலைமுரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கோபிநாத் அவர்களும் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த வருடம்தான் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தார். இந்த நிலையில் இவர் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட கோபிநாத் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.