சசிகலா வருகை குறித்து நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தை பரபரப்பாகி வருகின்றன.
Nettisans Reaction to Sasikala Entry in Tamilnadu : சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி கர்நாடக சிறையில் இருந்து கடந்த வாரம் விடுதலையான சசிகலா தமிழகம் வருகிறார் என கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன, அவரை 500 முதல் 1000 கார்கள் பின்தொடரும் என செய்திகள் வந்தன.
ஆனால் வெறும் 10 கார்கள் மட்டுமே அவரை தற்போது பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் அள்ளும் என கூறப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதல் லெகேசனிலே வெறும் 200-250 பேர் தான் இருந்தனர். அதிலும் பாதி பேர் பத்திரிக்கை செய்தியாளர்கள் தான்.
இதற்கு தான் இந்த பில்டப்பா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் சசிகலாவை அதிமுகவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.