udit surya
சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது.

Neet Exam forgery student udit surya arrested – நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, இந்த வழக்கை காவல் துறையினர் விசாரித்தனர். அதன்பின் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

சர்ச்சையிலும் பிகில் படத்தின் சாதனை, தெறிக்கவிட்டு கொண்டாடும் ரசிகர்கள் .!

இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உதித் சூர்யா தரப்பில் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், அவர் இந்த வார இறுதியில் சிபிசிஐடி போலீசாரிடம் சரண் அடையலாம். அப்படி செய்தால் இந்த முன் ஜாமீன் மனுவை, ஜாமீன் மனுவாக மாற்றி விசாரிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து திருப்பதியில் இருந்த உதித் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை தேனி நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.