இனி நடிக்கப்போகும் படங்கள் குறித்து நயன்தாரா அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு இயக்குனர்களுக்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில கண்டிஷன்களை விதித்துள்ளார். இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் மட்டும்தான் நடிப்பேன். ஒருவேளை மற்ற படங்களில் நடித்தால் நடிகர்கள் தொட்டு நடிக்கக் கூடாது. அப்படியான கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என முடிவு செய்து இயக்குனர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

இந்த கண்டிஷன்களுக்கெல்லாம் ஓகே என்றால் இயக்குனர்கள் தன்னிடம் கதை சொல்லலாம் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.