Nayanthara : வந்தா ராஜாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில மாநாடு படத்தில நடிக்கவிருக்காரு.
முன்னதா இந்த படத்தில ராஷி கண்ணா நாயகியா நடிக்க போறதா சொன்னாங்க.
ஆனா படம் தொடங்குறதுல ஏற்பட்ட தாமதம் காரணமா ராஷி கண்ணா இந்த படத்தில இருந்து விலகிட்டதாவும் அவங்களுக்கு பதிலா கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில ஒப்பந்தமாகி இருக்கிறதாவும் அறிவிக்கப்பட்டுச்சு.
விஜய் தேவரகொண்டாவின் உதட்டு முத்தக்காட்சியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்!
பிரபல இயக்குநர் பிரியதர்ஷனோட மகளான கல்யாணி போன வருஷம் தெலுங்கில வெளியான ஹலோ படம் மூலமா நாயகியா அறிமுகமாகியிருந்தாரு.
அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறலைனாலும் கல்யாணியோட வசீகர நடிப்பு எல்லோரையும் கவர்ந்திருந்தது.
இதைதொடர்ந்து கல்யாணி பிரயதர்ஷனோட கவனம் இப்போ தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருக்கு.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஜோடியா ஹீரோ படத்திலையும் துல்கர் சல்மான் ஜோடியா வான் படத்திலையும் நடிச்சிட்டு வர்ற கல்யாணி இப்போ அடுத்ததா சிம்புவோட மாநாடு படத்திலையும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்காங்க.
மேலும் சீரான இடைவெளில இந்த படங்கள் வெளியாகும் பட்சத்தில தமிழ் சினிமாவோட அடுத்த முன்னணி நாயகியா கல்யாணி இடம்பிடிப்பாங்கன்னும் சொல்லப்படுது.
இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என்றும் கல்யாணி பிரியதர்ஷனை பலர் ஆருடம் கூறுகிறார்கள்.