இரட்டைக் குழந்தைகளுடன் க்யூட்டாக போஸ் கொடுக்கும் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத டாப் ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழும் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த பிறகு இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் தந்தையர் ஆன நயன்-விக்கி தம்பதியினர் அக்குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்ற பெயரை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது குழந்தைகளின் முகங்களை மறைத்தபடி புகைப்படங்களை பதிவிட்டு வந்த நயன்-விக்கி தம்பதியினர் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் நயன்தாராவின் அழகிய புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். அப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காகி வருகிறது.