இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வளர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் லவ் டுடே என்னும் திரைப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

இவரது அடுத்த படம் குறித்த அப்டேட்க்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.