காத்துவாக்குல 2 காதல் படத்திற்காக நயன்தாரா எடுக்கும் முயற்சியை பார்த்து கவிதை எழுதி எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Nayanthara Starts Dubbing for KRK : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனரான இவர் அதன்பிறகு தானாசேர்ந்தகூட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

அவர்தான் என்னை Hero-வா ஆக்குனாரு – Actor GV.Prakash Latest Speech | Rebel Movie Pooja

பொதுவாக நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு டப்பிங் கொடுப்பதில்லை. ஆனால் காத்துவாக்குல 2 காதல் படத்திற்காக அவரே டப்பிங் கொடுக்க உள்ளார். தான் எழுதிய வசனங்களை டப்பிங் கொடுக்கும்போது நயன்தாரா பேசி புகைப்படங்களை வெளியிட்டு விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் உருகி உள்ளார்.

பிரதோஷ கால சிவ வழிபாடு : கிடைக்கும் பலன்கள்..

அதாவது இது குறித்த பதிவில் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனங்களை டப்பிங் பேசும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ட்விட்டர் பதிவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.