நயன்தாரா குடும்பத்தோடு கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடினார் விக்னேஷ் சிவன்.
Nayanthara Onam Festival Celebration : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடு சென்று சுற்றி வருகின்றனர். மேலும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வருகின்றனர்.
எந்த ஒரு பண்டிகையின் நாளாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நயன்தாராவின் பூர்வீகமான கேரளா சென்று அவரின் குடும்பத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
இந்த புகைப்படங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வளைய தளங்களில் செம வைரலாகி வருகின்றன.