சூப்பர் ஸ்டார் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் இணைத்து நடிக்கும் படம் தர்பார். படப்பிடிப்பு முடித்த நிலையில், தற்போது தர்பார் படத்தில் நயன்தாராவின் செயல் ரஜினியை கோவப்படுத்தி உள்ளது.
Nayanthara Issue in Darbar Shooting Spot : ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் தர்பார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவரும் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளது. இதனை பற்றி ரஜினியிடம் கேட்ட போது, படம் நன்றாக வந்து உள்ளது என்று கூறினார்.
இது போதாது முழுசா போஸ்ட் பண்ணுங்க – இணையத்தில் வெளியான பிகில் பின்னணி இசை ( வீடியோ )
இதனை தொடர்ந்து, படப்பிடிப்பின் போது நயன்தாரா செய்த செயல் ஒன்று ரஜினி வரை அனைவரையும் கோபப்பட செய்துள்ளது.
எப்பொழுதும் படத்தின் இறுதி படப்பிடிப்பின் போது கதாயாகிகளுக்கு முழு சம்பள பணமும் கொடுக்கப்பட்டு விடும்.
இந்த நிலையில், அரசு விடுமுறை என்பதால் நயன்தாராவிற்கு அந்த சமயம் பணம் அளிப்பதில் தாமதம் ஏற்படவே நயன்தாரா படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று சொல்லி விட்டாராம்.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் பணத்திற்கு தான் பொறுப்பு என்று பேசினாராம். இதனை தொடர்ந்து நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார்.
இதனால் சுமார் 3 மணி நேரம் படப்பிடிப்பு தாமதம் ஆகியதாம். அந்த சமயம் ரஜினி கூட நயன்தாரா மீது கோபமாக இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.