Nayanthara film Trouble
Nayanthara film Trouble

Nayanthara film Trouble – ராதாரவி, நயன்தாரா விவகாரம்தான் கடந்த வாரம் தமிழகத்தின் ஹாட் டாபிக். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து தரக்குறைவாக பேசியதற்காக விக்னேஷ் சிவன், ராதாரவியை டிவிட்டரில் கடுமையாக வசைப்பாடினார்.

மேலும் இதுவொரு முடிவுறாத படம் இதற்கு எதற்கு தற்போது விளம்பரம் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தற்போது தயாரிப்பு தரப்புக்கு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.

அதாவது விக்னேஷ் சிவன் இப்படி பேசியதால் இப்படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரவில்லையாம். மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கவிருந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டார்களாம்.

இதனால் தனக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லும் தயாரிப்பாளர், இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர போகிறாராம்.