ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்ந்து நடிகை நயன்தாரா பெப்ஸி அமைப்பிற்கு உதவியுள்ளார்.
Nayanthara Donates 20 Laks to FEFSI : கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்தும் முடங்கியுள்ளது.
கொரானா வைரசால் தனுஷ் படத்திற்கும் வந்த சோதனை – ஷாக்கிங்கில் ரசிகர்கள்.!
இதனால் பெப்சி அமைப்பின் மூலமாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அமைப்பே திரையுலக பிரபலங்களிடம் உதவி கேட்க அவர்களும் உதவி வருகின்றனர்.
இதுவரை பெரும்பாலும் நடிகர்கள் மட்டுமே உதவி வந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சம் கொடுத்து உதவி இருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூபாய் 20 லட்சம் கொடுத்து உதவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.