நடிகை நயன்தாரா வாடகைத் தாய் மூலம் அம்மாவாக முடிவு செய்துள்ளார்.
Nayanthara Decision on Baby Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும் விக்னேஷ் சிவனை நீண்ட வருடங்களாக காதலித்து வரும் நயன்தாரா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டு வருகிறது. இதனை ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் கோயில் ஒன்றுக்குச் சென்றிருந்த போது நெற்றி உச்சியில் குங்குமம் வைத்து இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய அழகுக்காவும் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.