நடிகை நயன்தாராவுக்கு கொரானா தோற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Nayanthara Affected by Corona : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளின் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாண்டவத்தை காட்டி வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மக்களைப் போலவே மருத்துவர்கள் காவலர்கள் அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வைரலாக அது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால் இதுகுறித்து விக்னேஷ் சிவன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நயன்தாராவுக்கு கொரோனா பெற்றிருப்பதாக பரவி வரும் தகவல் உண்மையல்ல. அவர் நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளார்.