வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அதே தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க, வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வலிமை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். எனவே, அவருடன் பெண் போலீஸ் வேடத்தில் நடிக்க கதாநாயகிகளை படக்குழு தேடி வருகிறது.
நடிகை நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. ஆனால், போலீஸ் வேடத்தில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் நயன்தாரா இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா சில கொள்கைகளில் உறுதியாக இருப்பவர். அதை மீறி அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.