தமிழ் சினிமாவில் நடக்கும் அநியாயம் பற்றி நட்டி நட்ராஜ் பதிவிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Natty Natarajan About Groupism in Tamil Cinema : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் ஒளிப்பதிவாளராகவும் வலம் வருபவர் நட்டி நட்ராஜ். இவர் சதுரங்க வேட்டை, நம்ம வீட்டு பிள்ளை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அஜித் விஜய் என பல நடிகர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் சுஷாந்த் சிங்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பாலிவுட் சினிமாவில் நெபோட்டிசம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் இந்தி படங்களில் நான் பணியாற்றுவது பிடிக்காமல் எனக்கு எதிராக ஒரு கூட்டம் உழைத்து வருவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நட்டி நட்ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க???? என பதிவிட்டுள்ளார்.
நட்டி நட்ராஜ் இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இவர் யாரைச் சொல்கிறார்? வாரிசு நடிகர்கள் குறித்துப் சொல்கிறாரா? அல்லது எதைப் பற்றிக் கூறுகிறார் என பெரிய விவாதமே நடைபெறத் தொடங்கியுள்ளது.