National Senior Volleyball
National Senior Volleyball

National Senior Volleyball – தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வென்றது தமிழக அணி.

67-வது தேசிய சீனியர் கைப்பந்து தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை சர்வதேச கைப்பந்து சம்மேளன செயல் துணைதலைவர் ஈசா ஹம்சா தொடங்கி வைத்தார்.

மற்றும், இந்த தொடக்க விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன், பொது செயலாளர் ராம் அவதார் சிங்,

வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். கல்வி குழும இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனவ்ரி 10-ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த தொடரில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் போட்டி போட உள்ளது.

நேற்று ஆண்கள் மற்றும் பி பிரிவு ஆண்கள், பெண்கள் அணியின் போட்டிகள் நடைபெற்றன.

அதே போல பெண்கள் சி, டி, இ எப் பிரிவு விளையாட்டுகள் மேலம்மாள் பள்ளி மைதானக்தில் மேடவாக்கத்தில் நடைபெற்றது.

மேலும், ஆண்களுக்கான சி, டி, எப் பிரிவு ஆட்டங்கள் கட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.