Nanjil Vijayan Reply to Vanitha Controversy
Nanjil Vijayan Reply to Vanitha Controversy

வனிதா மற்றும் அவரது லாயர் சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வெளியிட்ட வீடியோவிற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Nanjil Vijayan Reply to Vanitha Controversy : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.

சூர்யா தேவி என்பவர் யூடியூப் பக்கத்தின் மூலமாக வனிதாவை கிழித்து வருகிறார். இதனால் வனிதா அவரது லாயருடன் சென்று போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்போது வனிதாவின் லாயர் பேசிய போது நாஞ்சில் விஜயன் தான் சூர்யா தேவி பின்புலத்தில் இருக்கிறார். அவர்கள் இருவரும் கொஞ்சிக் கொண்டும் வீடியோ என்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி. அவர் கஞ்சா விற்பனை குறித்து தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று இருப்பதாக கூறி இரண்டையும் வெளியிட்டனர்.

தற்போது இதற்கு நாஞ்சில் விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது சூர்யா தேவியை நான் ஒருமுறை பேட்டி எடுத்து உள்ளேன்‌.

பழிக்குப் பழி.. முகத்தில் துப்பிய இந்திரஜா.. பதிலடி கொடுத்த ரோபோ சங்கர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதன் பிறகு அவரும் அவருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழிசை சௌந்தரராஜன் பிரச்சனைக்கு பிறகு சூர்யா தேவியை நான் பிளாக் செய்து விட்டேன்.

அதன் பிறகு இந்த வனிதாவின் பிரச்சனையின் போது பேட்டி எடுக்க தான் அவரை தொடர்பு கொண்டேன். அப்போது தான் இந்த டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டார். ‌

இந்த டிக் டாக் வீடியோவை வைத்து எனக்கும் சூர்யா தேவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. அப்படிப் பார்த்தால் நான் வனிதாவுடன் கூடத்தான் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளேன். அப்போ நான் வனிதாவோட அஞ்சாவது புருஷன்னு சொல்லுவாங்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது வனிதா எவ்வளவு புகைப்பிடிச்சாங்கனு நான் சொல்லி இருக்கேனா? பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி கூட கேரவன்ல சரக்கு அடிச்சுட்டு தான் போனாங்க.

அங்கு குடித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோ என்கிட்ட இருக்கு அதை நான் ரிலீஸ் பண்ணட்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.