அம்மன் கெட்ட போட்டுக்கிட்டு வனிதா பச்சயா பேசுனாங்க என வனிதா குறித்து நகுல் பேசியுள்ளார்.

Nakul About Vanitha Vijayakumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். சந்திரலேகா என்ற படத்தில் நடித்து இருந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மன் வேடம் போட்டு நடனம் ஆடினார். ஆனால் இவருடைய நடனத்தில் எனர்ஜி இல்லை என நடுவர்களான நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் கூறினர்‌.

இதனால் வனிதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்று கூறினார். இதனையடுத்து அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியவில்லை என குற்றம் சாட்டினார். இந்த நிலையில் நகுல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வனிதாவின் நடனம் குறித்து நாங்கள் தன்மையாக தான் கமெண்ட் கூறினோம். அவருக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்கவில்லை. அவரைப் பற்றி பேசக் கூட நான் விரும்பவில்லை.

அம்மன் வேடம் போட்டுக் கொண்டு செட்டில் எங்களைப் பற்றி அவர் அசிங்கமாக பேசியதாக செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்க ரம்யா கிருஷ்ணனிடம் எவ்வளவு பெரிய நடிகை. அவரிடம் வனிதா விஜயகுமார் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சேற்றில் கல் எறிந்தால் அது நம் மீதுதான் தெறிக்கும். வனிதாவின் விஷயமும் அப்படி தான் என கூறியுள்ளார். ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.