சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து குறித்து பதிவு செய்துள்ளார் நாகர்ஜூனா‌.

Nagarjuna About Samantha Divorce : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இதுபோன்ற பிரச்சனைகளால் இவருக்கும் நாக சைதன்யாவுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது.

பொதுமக்கள் கவனிக்கவும் : மெகா தடுப்பூசி முகாம்..தமிழக சுகாதாரத்துறை…

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா. இருவரும் திருமண வாழ்க்கையில் பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்ந்து இணைந்து இருப்போம் என தெரிவித்தார்.

விஜய்சேதுபதி படத்தில் நான் அவங்களுக்கு தங்கச்சியா நடிச்சு இருக்கேன்! – Model Srushti Speech | HD

இவர்களைத் தொடர்ந்து தற்போது நாகர்ஜுனா இவர்களின் விவாகரத்து குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இருவரும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் முடிவில் தலையிட முடியாது. ஆனால் சமந்தாவின் அன்பு என்னால் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தாருடன் சமந்தா பகிர்ந்து கொண்ட அன்பை என்றும் மறக்க முடியாது. இருவருக்கும் அவர்களுக்கு வழியில் பயணிக்க பலத்தை கொடுப்பாயாக இறைவா என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.