சமந்தாவை பிரிந்த நாக சைதன்யாவின் அடுத்த காதல் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Nagachaitanya About His Next Love : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகசைதன்யா. பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மூத்த மகனான இவர் தென்னிந்திய நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இதுவரை எந்த பிரபலங்களுக்கும் நடக்காத அளவில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..
திருமண நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த சமந்தா ஹனிமூன் சென்றிருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எங்களுக்கு இன்று முதல் இரவு என பதிவு செய்து கொண்டாடினார்.
ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை முழுசாக நான்கு வருடங்கள் கூட நீடிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்து அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பெரிதாக எதையும் பதிவு செய்யாமல் இருந்து வந்த நாக சைதன்யா தற்போது தன்னுடைய அடுத்த காதல் என ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny SPeech
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தன்னுடைய அடுத்த காதல் என நாக சைதன்யா பதிவு செய்திருப்பது விவாகரத்து விஷயத்தில் சமந்தாவின் மீதுதான் தவறு இருக்கிறது என பலரையும் பேச வைத்துள்ளது.