திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றியதாக நாடோடிகள் படம் நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Nadodigal Shandini Complaint on Ex Minister Manikandan : தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சியில் அமைச்சராக செயலாற்றியவர் மணிகண்டன். தற்போது திமுக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி அமைச்சர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த ஐந்து வருடங்களாக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார் நடிகை சாந்தினி.
இதனால் அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.