
தனுஷின் நானே வருவேன் படத்தின் படக்குழு இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் இடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் நானே வருவேன். இப்படத்தை அவரது சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்துள்ளார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் தனுஷின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நானே வருவேன் திரைப்படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 6:20 மணி அளவில் வெளியாகும் என இப்படத்தை தயாரிக்கும் எஸ். கலைப்புலி தானு அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.