வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் இன்று மாலை வெளியாகியுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள். காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு குறித்த அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 14ம் தேதியான இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ‘அப்பத்தா’ என்று தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுதி இருக்கிறார். வடிவேலு பாடி நடித்துள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.